டூவீலர், டெம்போ மோதிய விபத்தில் ஒருவர் பலி

குமாரபாளையம் அருகே டூவீலர், டெம்போ மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.

Update: 2022-08-01 10:45 GMT

குமாரபாளையம் அருகே டூவீலர், டெம்போ மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.

சேலம் மாவட்டம், வெள்ளரிவெள்ளி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன், 31. தனியார் நிறுவன ஊழியர். நேற்றுமுன்தினம் நள்ளிரவு டூவீலரில், 12:20 மணியளவில் சேலம் கோவை புறவழிச்சாலை எக்ஸ்கல் கல்லூரி அருகே வந்துகொண்டிருந்தார். ரங்கனூர் பிரிவில் இருந்து வலது பக்கமாக டூவீலர் திரும்பும் போது,  எதிரில் வேகமாக வந்த டெம்போ வாகனம் மோதியது. இதில் பலத்த அடிபட்ட அவர், அதே இடத்தில் இறந்தார். டெம்போ ஓட்டுனர் விழுப்புரத்தை சேர்ந்த இருதயராஜ், 45, என்பவரை கைது செய்த குமாரபாளையம் போலீசார், விசாரிக்கின்றனர்.

Similar News