குமாரபாளையத்தில் ஓ.ஏ.பி. ஆணை வழங்கிய நகராட்சி சேர்மன்

குமாரபாளையத்தில் முதியோருக்கு ஓ.ஏ.பி. ஆணையை நகராட்சி சேர்மன் வழங்கினார்.

Update: 2022-09-23 16:30 GMT

குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் முதியோர் ஓய்வூதிய ஆணையை பயனாளிகளுக்கு வழங்கினார்.

குமாரபாளையம் நகராட்சி பகுதியில் முதியோர் ஓய்வூதியத்திற்கு (Old Age Pension - OAP) விண்ணப்பிக்கும் நபர்கள் அதனை பெற தகுதி உள்ளவர்தானா? என சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜானகி தீவிர விசாரணை செய்து, உரிய நபர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அதன்படி நகராட்சி சேர்மனிடம் முதியோர் பலர் ஓ.ஏ.பி. விண்ணப்பங்கள் கொடுத்து உதவி கேட்டு வருகின்றனர். இவர்களின் விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு பரிசீலித்து ஓ.ஏ.பி. ஆணை தாசில்தாரால் வழங்கபடுகிறது.

இந்த ஆணைகளை 15வது வார்டு பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. சேர்மன் விஜய்கண்ணன் பங்கேற்று தகுதியான முதியோர்களுக்கு ஓ.ஏ.பி. ஆணைகளை வழங்கினார். கவுன்சியலர் கோவிந்தராஜ், நிர்வாகிகள் செல்வராஜ்,செந்தில்குமார், சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News