நில முகவர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

குமாரபாளையத்தில் நில முகவர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.

Update: 2023-07-17 04:02 GMT

குமாரபாளையத்தில் நில முகவர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. 

நாமக்கல் மாவட்ட நில முகவர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த பாதுகாப்பு நல சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது.புதிய தலைவராக சக்தி, செயலராக சந்திரசேகரன், பொருளராக குணசேகரன், துணை செயலராக விடியல் பிரகாஷ், செயற்குழு உறுப்பினராக செல்வராஜ் மற்றும் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சங்க ஆலோசராக நலவாரியம் செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டார். புதிய நிர்வாகிகளுக்கு நில முகவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரவித்தனர்.

குமாரபாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 500க்கும் மேற்பட்டோர் பல பணிகள் காரணமாக வந்து செல்கின்றனர். இவர்களுக்கு போதுமான இருக்கைகள் இல்லை, ஆகவே, பொதுமக்களுக்கு தேவையான இருக்கைகள் அமைக்க வேண்டும், ஆண்கள் மற்றும் பெண்கள் அங்கு கழிப்பிட வசதி இல்லாமல் தவிப்பதால், அங்கு பொதுமக்களுக்கு கழிப்பிடம் அமைக்க வேண்டும், மேலும் மின்விசிறி வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்ற வேண்டும், என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நில முகவர்கள் சங்கம் ஏற்கனவே ஒன்று இருக்கும் நிலையில் இது இரண்டாவது சங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News