குமாரபாளையம் அருகே மாரியம்மன் கோவில் திருவிழா முப்பாடு அழைத்தல்.

Kovil Thiruvizha Invitation in Tamil-குமாரபாளையம் அருகே மாரியம்மன் திருவிழாவையொட்டி முப்பாடு அழைத்தல் வைபவம் நடைபெற்றது.

Update: 2022-05-05 12:30 GMT

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி குதிரை மற்றும் முப்பாடு அழைக்கும் வைபவம் நடைபெற்றது.

Kovil Thiruvizha Invitation in Tamil-குமாரபாளையம் அருகே மாரியம்மன் திருவிழாவையொட்டி முப்பாடு அழைத்தல் வைபவம் நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது. காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. குட்டிகினத்தூர் பகுதியில் இருந்து குதிரை மற்றும் முப்பாடு அழைக்கும் வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் ஆடி, பாடியவாறு பங்கேற்றனர். பெண்கள் பலர் அக்னி சட்டிகளை கைகளில் ஏந்தியவாறு, ஓம் சக்தி என்ற சரண கோஷத்துடன் வந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கபட்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News