21 ஆண்டுகள் சாரணிய படையில் பணியாற்றிய ஆசிரியைக்கு விருது

21 ஆண்டுகள் சாரணிய படையில் பணியாற்றிய குமாரபாளையம் ஆசிரியைக்கு விருது வழங்கப்பட்டது.

Update: 2023-01-31 11:30 GMT

சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், குமாரபாளையம் சாரணிய ஆசிரியை மாலதிக்கு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருது வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாரணிய படையில் பணியாற்றி வருபவர் மாலதி. இவர் பள்ளியில் மாணவியாக படிக்கும் காலம் முதல், ஆசிரியை பணியில் சேர்ந்தது வரை தொடர்ந்து 21 ஆண்டுகள் சாரணிய இயக்கத்திற்கு தன்னை அர்ப்பணித்து உள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த சாரணியர்களுக்கு விருது வழங்கப்படும். இந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், குமாரபாளையம் சாரணிய ஆசிரியை மாலதிக்கு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருது வழங்கினார். பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் நந்தகுமார் உடனிருந்தார்.

இந்த பள்ளியில் உள்ள சாரணிய மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக ஆளுநரிடம் ராஜ்ய புரஸ்கார் விருது பெற்றுள்ளார்கள் என்பதும், இந்த ஆண்டிற்கான நாமக்கல் மாவட்ட அளவிலான சிறந்த பள்ளிக்கான விருது இந்த பள்ளிக்கு கிடைத்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தலைமை ஆசிரியை சிவகாமி, பி.டி.ஏ. நிர்வாகிகள் ஆசிரியை மாலதியை பாராட்டினர்.

Tags:    

Similar News