குமாரபாளையத்தில் அங்காளம்மன், பெரியாயி அம்மன் மகா குண்டம் திருவிழா

Periyayi Amman Temple-குமாரபாளையத்தில் அங்காளம்மன், பெரியாயி அம்மன் மகா குண்டம் திருவிழா நடைபெற்றது.

Update: 2023-02-22 16:15 GMT

Periyayi Amman Temple

Periyayi Amman Temple-நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அங்காளம்மன், பெரியாயி அம்மன் மகா குண்டம் திருவிழா பிப். 5ல் பூச்சாட்டுதல் விழாவுடன் துவங்கியது. காவிரி ஆற்றிலிருந்து மேள தாளங்களுடனும், அலகுகள் குத்தியவாறும் பால் குடங்கள், அக்னி சட்டி, தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பெரியாண்டிச்சி அம்மன் அருள்பாலித்தவாறு வந்தார். நேற்று மகா குண்டம், பூ மிதித்தல் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று குண்டம் இறங்கி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்கள். பிப். 23ல் முப்பூஜை நடைபெறவுள்ளது.

குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் மகா குண்டம், தேர்த்திருவிழா பிப்.14 பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று மறுபூச்சாட்டு விழா நடைபெற்றது. இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. பிப். 22 கொடியேற்று விழா, பிப். 28ல் அம்மனுக்கு புனித நீர் அபிஷேகம், தேர்க்கலசம் வைத்தல், அம்மன் சக்தி அழைத்தல், மார்ச். 1ல் மகா குண்டம், பூ மிதித்தல், பொங்கல் ஆராதனை, மார்ச். 2ல் அம்மன் திருக்கல்யாணம், மகா தேர்த்திருவிழா, வண்டி வேடிக்கை, மார்ச். 3ல் தேர் நிலை அடைதல், வாண வேடிக்கை காட்சி விழா, அம்மன் அலங்கார திருவீதி உலா, மார்ச். 4ல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, மார்ச். 5ல் அம்மனுக்கு ஊஞ்சல் விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களில் பூச்சாட்டு மற்றும் கம்பம் நடுதல் விழா நடைபெற்றது.

இதே போல் குமாரபாளையம் அருகே கள்ளிபாளையம் சக்தி காளியம்மன், சக்தி மாரியம்மன் கோவிலில் 23ம் ஆண்டு பூ மிதித்தல் விழாவையொட்டி நேற்று மறு பூச்சாட்டு விழா நடைபெற்றது. மாரியம்மனுக்கு கம்பம் நடுதல், 28ல் அம்மனுக்கு புனித நீர் அபிஷேகம், அம்மன் சக்தி அழைத்தல், மார்ச். 1ல் மகா குண்டம், பூ மிதித்தல், பொங்கல் ஆராதனை, மார்ச். 2ல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் காளிமுத்து, நிர்வாகிகள் சுப்ரமணி, நந்தகுமார், சண்முகம், கிருஷ்ணராஜ், தங்கராசு மற்றும் குண்டம் பராமரிப்பு குழுவினர் செய்து வருகின்றனர். பிப். 28, மார்ச். 1, மார்ச். 2 ஆகிய 3 நாட்களும் பக்தர்களுக்கு மூன்று வேளைகளும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News