ரம்ஜான் தினமான 14 ஆம் தேதி ஊரடங்கை தளர்த்த வேண்டும் ; நாகூர் தர்கா ஆதினஸ்தர்கள்

ரம்ஜான் தினமான 14ம் தேதி ஊரடங்கை தளர்த்த வேண்டும் என்று நாகூர் தர்கா ஆதினஸ்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-05-08 13:15 GMT

தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை வேகமெடுத்துள்ள நிலையில் வருகின்ற 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு போட்டு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் நோன்பு கடைபிடித்து வரும் இஸ்லாமியர்களுக்கு வருகின்ற 14 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை அன்று தளர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.  சிறுபான்மை பாதுகாப்பு இயக்கத்தின் மாநில தலைவரும், நாகூர் தர்கா ஆதினஸ்தர்கள் சங்கத்தின் தலைவருமான தமீம் அன்சாரி சாஹிப் இன்று அளித்த பேட்டியில், இவ்வாறு கூறியுள்ளார்.

இஸ்லாமியர்களின் 5 கடைமைகளின் மூன்றாவது கடமையான நோன்பு கடைபிடித்து வரும் இஸ்லாமியர்கள் வருகின்ற 14 ஆம் தேதி அன்று ரமலான் பண்டிகையை கொண்டாட காலை 6 மணியில் இருந்து 12 மணி வரை தளர்வு அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ரமலான் நாளில் இஸ்லாமியர்கள் தங்களது தலையாய கடமையை நிறைவேற்ற கடைவீதிகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்கும் வகையில் தளர்வு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Tags:    

Similar News