எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேர் வேதாரண்யம் அருகே கைது

எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேர் வேதாரண்யம் அருகே இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-05-16 14:30 GMT

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் மற்றும் தமிழக  கடற்கரை பாதுகாப்பு படையினர் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இந்தி கடல் எல்லை பகுதிக்குள் நுழைந்த5 நாட்டுப் படகில் இருந்த 14 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் சுற்றி வளைத்தனர். 

பின்னர் அவர்கள் ௧௪பேரும் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டு தமிழக கடலோர பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.. பின்னர்  இந்தியக் கடற்படையால் கைதான இலங்கை மீனவர்கள் நாகை துறைமுகம் அழைத்து வரப்பட்டனர்.  கைதான இலங்கை மீனவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழும காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

கைது செய்யப்பட்ட 14 இலங்கை மீனவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவி செய்து உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை அடிக்கடி கைது செய்வது உண்டு. இந்நிலையில் தற்போது இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள் மீன் பிடிக்க வந்ததால் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News