டாஸ்மாக் கடையில் மதுபானத்தை கொள்ளையடித்த 8 பேர் கைது

நாகையில் டாஸ்மாக் கடையில் ரூ 73 ஆயிரம் மதிப்புள்ள மதுபான பாட்டில்களை கொள்யைடித்த 8பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-05-16 09:33 GMT

தமிழகம் முழுவதும் கொரோனா நோய் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள காரணத்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாகை மாவட்டம் கீழையூரை அடுத்த பாலக்குறிச்சி பகுதியில் இயங்கிவந்த டாஸ்மாக் கடையில் கடந்த 14ம் தேதி நள்ளிரவு மர்ம கும்பல் அங்கிருந்த கடை காவலாளிகள் அந்தோணிசாமி, மைக்கேல் ராஜ் ஆகிய இருவரையும் கட்டிப்போட்டு தாக்கி 73 ஆயிரத்து 400 ரூபாய் மதுபாட்டில்களை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.

தொடர்ந்து தகவல் அறிந்து வந்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா தலைமையிலான போலிசார் டாஸ்மாக் கடையில் நேரில் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து மதுபானங்கள் திருட்டு சம்பவம் குறித்து 3 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மதுபானங்கள் திருட்டில் ஈடுபட்ட திருக்கண்ணங்குடியை சேர்ந்த ஹரிஹரன் 27, குரு பாலன் 20, தனராஜ்20, தமிழ்மாறன் 21, புல்புல் (எ) பிரவீன் 19, நாகப்பட்டினம் அடுத்த செல்லூர் ரதீஷ் குமார் 26, கலையரசன் 20, சதீஷ் 27 ஆகிய 8 குற்றவாளிகளை தனி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.  வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News