முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு நாகூர் தர்கா ஆதினஸ்தர்கள் வாழ்த்து

புதிய முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு நாகூர் தர்கா ஆதினஸ்தர்கள் வாழ்த்து.தெரிவித்தனர்.

Update: 2021-05-05 12:15 GMT

தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு நாகூர் தர்கா ஆதினஸ்தர்கள் வாழ்த்து.தெரிவித்து. கொரோனா கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் தமிழக மக்களின் உயிர் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்..

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 159 இடங்களை கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. அதனைத் தொடர்ந்து திமுக தலைவர் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

இந்நிலையில் நாகை மாவட்டம் நாகூரில் ஆதீனஸ்தர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு நாகூர் தர்கா ஆதினஸ்தர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் கொரோனா கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் தமிழக மக்களின் உயிர் காக்க புதிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி கேட்டுக் கொண்டனர்.

Tags:    

Similar News