திருமருகல் அருகே பாழடைந்த துணை சுகாதார நிலையம் : எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே பாழடைந்த ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை எம்எல்ஏ ஆளுர் ஷாநவாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-05-31 12:15 GMT

நாகப்பட்டினம் அருகே பாழடைந்த ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை எம்எல்ஏ ஆளுர் ஷாநவாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அம்பல் ஊராட்சியில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு 5 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் துணை சுகாதார நிலையத்தை திறக்கும்படி அப்பகுதி பொதுமக்கள் நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷாநவாஸிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனை அடுத்து துணை சுகாதார நிலையத்தை எம்எல்ஏ ஆளுர் ஷாநவாஸ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வில் கட்டிடம் மிகவும் பழுதடைந்து விட்டதாலும் அதனை பயன்படுத்த இயலாத நிலையில் இருப்பதாலும் மாற்று ஏற்பாடு செய்து தருவதாக கூறினார்,

அதனை தொடர்ந்து அதன் அருகில் மெயின் ரோட்டில் உள்ள சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்டு பயன்பாடு இன்றி 5-ஆண்டுகளாக உள்ள சமுதாய கூடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதனை பராமரிப்பு செய்து உபயோகத்திற்கு கொண்டு வருவதாக கூறினார்.

Tags:    

Similar News