நாகூர் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி எம்எல்ஏ வழங்கினார்

நாகூர் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை எம்எல்ஏ ஷா நவாஷ் வழங்கினார்.

Update: 2021-06-08 07:49 GMT

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை எம்எல்ஏ ஷா நவாஷ் வழங்குகிறார். அருகில் திமுக மாவட்ட பொறுப்பாளர் கௌதமன்.


நாகப்பட்டினத்தை  அடுத்துள்ள நாகூர் அரசு மருத்துவமனையில் கொரோனா அவசர தேவைக்கு ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகள் இல்லாததை அறிந்த காதிஜா நாச்சியார் என்பவர் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி ஒன்றை வழங்கினார்.

இந்த நிலையில் நன்கொடையாக வழங்கப்பட்ட ஆக்சிஜன் கருவியை நாகூர் அரசு மருத்துவனையில் சட்டமன்ற உறுப்பினர் ஷா நவாஷ், திமுக மாவட்ட பொறுப்பாளர் கௌதமன் ஆகியோர் மருத்துவர்களிடம் ஒப்படைத்தனர்.

அப்போது அவசர சிகிச்சைக்காக வரும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கருவியை பயன்படுத்த வேண்டும் என மருத்துவர்களிடம் சட்டமன்ற உறுப்பினர் கேட்டுகொண்டார்.


Tags:    

Similar News