இபிஎஸ்,ஓபிஎஸ் இருவரும் மோடி கைக்குள் : விசிக விமர்சனம்

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் மோடியின் கைப்பிடிக்குள் உள்ளனர் என்று திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வி.சி.க வேட்பாளர் விமர்சனம் செய்தார்.

Update: 2021-03-24 11:28 GMT

அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தில் ஒரு இலை எடப்பாடியிடமும், ஒரு இலை ஓ.பி.எஸ் இடமும், நடுவில் உள்ள காம்பு மோடியிடமும் உள்ளது ; நாகையில் விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் பேச்சு.

நாகையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விசிக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் வெற்றிபெற  செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. திமுக மாவட்ட செயலாளர் கௌதமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் பேசுகையில் ,' நாகை தொகுதியில் எதிர் தரப்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வேட்பு மனுவில் பல கோடி சொத்து மதிப்பை காட்டியுள்ளார். நான் தெருக்கோடியில் நிற்கிறேன். என்னிடம்  பணம் இல்லை. நான் உங்களை நம்பியே உள்ளேன். அதிமுகவின் சின்னமான இரட்டை இலையில் ஒரு இலை எடப்பாடி பழனிச்சாமி. மற்றொரு இலை ஓ .பன்னீர்செல்வம். நடுவில் உள்ள காம்பு மோடி. அவர்தான் அதிமுகவை தாங்கிப்பிடித்துள்ளார்.' என்று  விமர்சித்தார்.

Tags:    

Similar News