நாகை அருகே மகான்களின் சமாதி சேதம், மர்ம நபர்கள் கைவரிசை

நாகை அருகே அமைந்துள்ள உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா ஆண்டவரின் வழியில் வந்த மகான்களின் சமாதியை சேதப்படுத்தி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-04-24 12:15 GMT

நாகை அடுத்துள்ள காடம்பாடி பகுதியில் உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா ஆண்டவரின் வழியில் வந்த மகான்களின் சமாதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்துவது உள்ளிட்ட தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அறக்கட்டளை இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சமாதி மற்றும் கொடி கம்பத்தை மர்ம நபர்கள் நேற்று இரவு சேதப்படுத்தி சென்றுள்ளனர்.

இரும்பாலான கொடிமரம் அடியோடு சாய்ந்து சேத மடைந்ததை துள்ளதை கண்ட அறக்கட்டளை அறங்காவலர் நவாப்ஜான் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். புகாரை பெற்ற வெளிப்பாளையம் போலிசார் கொடி கம்பத்தை சேதப்படுத்திய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News