நாகையில் ஊழியருகளுக்கு கொரோனா வங்கிகள் மூடல்

நாகையில் பிரபல வங்களில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து 2 வங்கிகள் மூடப்பட்டது.

Update: 2021-04-26 10:56 GMT

நாகை மாவட்டத்தில் நாளுக்குநாள் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 12171 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நாகையில் உள்ள பிரபல இரண்டு வங்கி ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாகை பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் ஒருவருக்கும், நாகை கெஜ்.டி.எப்.சி வங்கி ஊழியர் ஒருவருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யபட்டு இருப்பதாக கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாக்கத் அலி தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து முன்னறிவிப்பின்றி இரண்டு வங்கிகளும் மூடப்பட்டதால், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வெளியேறினார்கள்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஊழியர்களுக்கு தொற்று உறுதியாகி மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட, பாரத ஸ்டேட் வங்கி இரண்டாவது முறையாக மீண்டும் மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News