நாகப்பட்டினத்தில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்

நாகப்பட்டினத்தில் அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளுக்கு ஓ. எஸ். மணியன் மாலை அணிவித்தார்.

Update: 2021-10-17 06:44 GMT

அ.தி.மு.க. பொன்விழா ஆண்டையொட்டி நாகையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

அ.தி.மு.க.வின் 50வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவ சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் எம்.எல்.ஏ.மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினார்.

இதேபோல் நாகூர் சம்பா தோட்டம் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும் முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News