சோழவந்தான் சிவன் கோவிலில் குருவார பிரதோஷ விழாவையொட்டி சுவாமி வீதி உலா

சோழவந்தான் சிவன் கோவிலில் குருவார பிரதோஷ விழாவையொட்டி சுவாமி வீதி உலா நடைபெற்றது.

Update: 2023-01-20 07:06 GMT

சோழவந்தான் சிவன் கோவிலில் குருவார பிரதோஷ விழாவையொட்டி சுவாமி வீதி உலா நடைபெற்றது.

சோழவந்தான் சிவன் கோவிலில் தை மாதம் குருவார பிரதோஷ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ளது பிரளய நாதர் சுவாமி சிவன் கோவில். அங்கு ஆண்டுதோறும் தை மாதம் நடைபெறும் குருவார பிரதோஷ விழா மிகவும்  சிறப்பு வாய்ந்ததாகும். அந்த வகையில் இந்த ஆண்டும் குருவார பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு சனீஸ்வர லிங்கத்திற்கும் மற்றும்  நந்திகேஸ்வரர் சிவனுக்கும் பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமியும் அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தனர். விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் சுவாமியுடன் திருக்கோவிலை வலம்வந்து சிவாய நமஹ சிவாய நமஸ்ரீ என்று சொல்லி வந்தனர்.சிறப்பு அர்ச்சனை பூஜைகள் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை பி.ஜே.பி. விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர், எம். வி. எம். குழும தலைவர் மணிமுத்தையா,நிர்வாகி வள்ளிமயில், எம். வி. எம். தாளாளர், சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் மருதுபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதே போல திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலிலும், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருததோதைய ஈஸ்வரர் ஆலயத்திலும், மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும், தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோவிலிலும், பேட்டை அருணாசல ஈஸ்வரர் ஆலயத்திலும், திருவாலவாயநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும் சனி பிரதோஷ விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News