அலங்காநல்லூர் கூட்டுறவு சங்க செயலருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா

Cooperative Society Secretary Retirement Celebration

Update: 2022-07-01 09:15 GMT

அலங்காநல்லூரில் நடைபெற்ற கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளர் வெள்ளைச்சாமி பாண்டியன்பணி நிறைவு பாராட்டு விழா

அலங்காநல்லூர் ஒன்றியம், சத்திர வெள்ளாளப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக பணியாற்றிய வெள்ளைச்சாமி பாண்டியன் பணி  ஓய்வு பெற்றார்.

இதையொட்டி,  வங்கியில் நடந்த நிகழ்வில் வங்கித்தலைவர் இருளப்பன், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கள மேலாளர் அழகர்சாமி, அலங்காநல்லூர் சரக மேற்பார்வையாளர் பாலமுரளி மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் சிதம்பரம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பெத்திராஜா, வலையபட்டி செல்லக்கண்ணு, ஒன்றியக் கவுன்சிலர் தனசேகரன், சுபாஷ், மதுனர வீரன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.இதில், வங்கி பணியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் விவசாயிகள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

Tags:    

Similar News