மதுரையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மறியல் போராட்டம்
ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்வாரிய அலுவலகத்தில் ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்;
ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்வாரிய அலுவலகத்தில் ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள, தலைமை மின்வாரிய அலுவலகத்தில், ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சிஐடியு. தமிழ்நாடு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு சார்பாக அதன் மதுரை மின் திட்ட தலைவர் திருமுருகன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி தமிழ்நாடு அரசும், மின்சார வாரியமும் அறிவித்தபடி அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் தினக்கூலி ரூ.380 வழங்க வேண்டும். கே 2 மற்றும் சிட் ஒப்பந்தப்படி பல ஆண்டுகள் பணிசெய்த ஒப்பந்தப் பணியாளர்களை அடையாளம் கண்டு பணி நியமனம் வழங்கி, பணிநிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்கள் இல்லை என்ற பொய்யான அறிக்கை அனுப்புவதைக் கைவிட்டு பணிச்சான்றிதழ் வழங்க வேண்டும்.
ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.