குமரியில் வெளுத்து வாங்கிய கனமழை - சாலைகளில் வெள்ளம்
குமரியில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கனமழையால் கன்னியாகுமரி மாவட்டம், வரலாறு காணாத பாதிப்பை சந்தித்து அதில் இருந்து மீண்டு வராத நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் மழை இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் இன்று மாவட்டத்தில் நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, சுசீந்திரம் உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. சுமார் 1 மணி நேரத்திற்க்கும் மேலாக பெய்த திடீர் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மேலும் நாகர்கோவில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.