கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் இலவச மருத்துவ முகாம்

Update: 2023-12-11 16:03 GMT

இலவச மருத்துவமுகாமை துவக்கி வைத்த தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ.

தமிழகத்தில் அரசு சார்பில் மட்டும் இன்றி தனியார் மருத்துவமனைகள், அறக்கட்டளைகள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சக்தி மகளிர் டிரஸ்ட் குலசேகரம் மூகாம்பிகை மருத்துவமனை இணைந்து  இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாமை நடத்தின. இந்த மருத்துவ முகாமை  தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்.

தோவாளை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் டாக்டர் சாந்தினி பகவதியப்பன் தலைமையில் நடந்த முகாமில் ஏராளமான பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டார்கள்.

கண் மற்றும் அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு தேவையானவர்களுக்கு சிசிச்சை அளிக்கப்பட்டது. மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டது. கண் மருத்துவர் டாக்டர் குமார், பொது மருத்துவர் டாக்டர் விகாஷ் ஆகியோர் தலைமையில் மருத்துவக் குழு பொதுமக்களுக்கு சிசிச்சை அளித்தது.

முன்னாள் கவுன்சிலர் தர்மராஜ் ஆசிரியர் சேகர் மற்றும் சக்தி மகளிர் டிரஸ்ட் உறுப்பினர்கள் மருத்துவமனை மக்கள் தொடர்பாளர்  சரவணன் உள்பட பலர் இதில் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News