அரசு பேருந்து மற்றும் 2 லாரிகள் அடுத்தடுத்து மோதியதில் 8 பேர் படுகாயம்

குமரியில் அரசு பேருந்து மற்றும் 2 லாரிகள் அடுத்தடுத்து மோதியதில் 8 பேர் படு காயம் அடைந்தனர்.

Update: 2021-07-25 13:00 GMT

கன்னியாகுமரியில் சாலை விபத்து, ௮ பேர் படுகாயம்

விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி பகுதியில் இருந்து ஜல்லி கற்களை அதிக பாரமாக ஏற்றி கொண்டு மார்த்தாண்டம் நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்தது.

நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் ஆரல்வாய்மொழி அருகே அதிவேகமாக வந்து கொண்டு இருந்த லாரியை கண்ட ஆரல்வாய்மொழி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிசந்திரன் டிப்பர் லாரியை நிறுத்தினார்.

ஆனால் போலீசாரை கண்டதும் லாரி கூடுதல் வேகம் எடுக்க அதனை துரத்தி பிடிக்க தனது இருசக்கர வாகனத்தில் சிறப்பு ஆய்வாளர் விரட்டி சென்றார்.

போலீசை பார்த்து கொண்டே முன்னாள் சென்ற லாரி மற்றும் அரசு பேருந்தை முந்தி சென்றதில் நிலை தடுமாறிய டிப்பர் லாரி சாலையோரம் இருந்த கடைக்குள் புகுந்தது விபத்துக்குள்ளானது.

இதில் டிப்பர் லாரி பின்னால் சிமென்ட் பாரம் ஏற்றி வந்த மற்றோரு லாரியும் அதன் பின்னால் வேளாண்கன்னியில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டு இருந்த அரசு விரைவு பேரூந்தும் அடுத்தடுத்து டிப்பர் லாரி பின்னால் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் அரசு பேருந்து ஓட்டுநர் தியாகராஜன் மற்றும் பயணிகள் உட்பட எட்டு பேர் படுகாயம் அடைந்தனர், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த ஆரல்வாய்மொழி போலீசார் விசாரனை மேற்கொண்டனர்.

விபத்து காரணமாக நாகர்கோயில் - நெல்லை சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News