காஞ்சிபுரம் திமுக வேட்பாளரை ஆதரித்து நெசவாளர் அணியினர் பிரசாரம்

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து மாவட்ட நெசவாளர் அணியினர் தீவிர பிரசாரம் மேற் கொண்டனர்.

Update: 2021-03-29 12:45 GMT

காஞ்சிபுரம் சட்டமன்ற திமுக வேட்பாளருக்கு ஆதரவாக மாவட்ட நெசவாளர் அணி சார்பில் இன்று நெசவாளர் பகுதிகள் மற்றும் பட்டுச்சேலை விற்பனை பகுதிகள் , காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட நெசவாளர் அணியினர் வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரத்தில் நெசவாளர்கள் கடந்த ஓராண்டாக கொரோனா காலத்தில் வேலையின்மை, போலி பட்டு சேலைகள் விற்பனை போன்றவைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து வேறு வேலைக்கு செல்லும் நிலையில் உள்ளனர்.

இந்த நிலையினை தவிர்க்க வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தால் போலி பட்டு புடவைகள் முற்றிலும் தடை செய்யப்படும் , போலி கூட்டுறவு சங்கங்கள் நீக்கப்படும் . சங்க உறுபாபினர் நலன்காக்கபடும் என பல வாக்குறுதிகளை திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக கூறி அனைத்து தரப்பினரிடையே வாக்குகள் சேகரித்தனர்.

Tags:    

Similar News