நரிக்குறவர் பகுதிகளில் தெருக்கூத்து மூலம் வாக்குபதிவு விழிப்புணர்வு
நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு நிகழ்த்தும் வகையில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவு வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூர் வருவாய் துறை சார்பில், தெருக்கூத்து கலைஞர்கள் வாயிலாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் , கட்பாட்டு இயந்திரம் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் இயந்திரம் ஆகியவைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில், நுாறு சதவீத ஓட்டுப்பதிவு வலியுறுத்தி பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது.
அந்த வகையில், செரப்பனஞ்சேரி குறு வட்டம், துாண்டல்கழனி நரிக்குறவர் வசிக்கும் பகுதியில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீபெரும்புதுார் சட்டசபை தொகுதியின் உதவி தேர்தல் அலுவலரும், ஸ்ரீபெரும்புதுார் ஆர்.டி.ஓ.வுமான சரவணகண்ணன் தலைமை தாங்கினார்.
இதில், தெருக்கூத்து நாடக கலைஞர்கள் வேடம் அணிந்து, 18 வயது நிரம்பிய அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும், வாக்குக்கு பணம் பெற கூடாது, வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை உள்ளிட்டவையை வலியுறுத்தி பொதுமக்களிடம், தெருக்கூத்து நாடக வடிவில் விழப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, படப்பை, ஒரகடம் தொழிற்பயிற்சி நிலையம், செரப்பனஞ்சேரி, ஒரகடம் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நேற்று தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்டம் மற்றும் வாக்குபதிவு நடைமுறைகள் விளக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், குன்றத்துார் தாசில்தார் நாராயணன், வருவாய் ஆய்வாளர் கணேஷ்குமார், ரம்யா, வருவாய் துறையினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.