ஏனாத்தூர் அருகே வாகன சோதனையில் ‌‌புடவைகள், துண்டுகள் பறிமுதல்

ஏனாத்தூர் பகுதியில் பறக்கும் படை வாகன சோதனையில் அவ்வழியாக வந்த ஆட்டோவில் கொண்டுவந்த புடவைகள் மற்றும் துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2021-09-26 15:45 GMT

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட புடவைகள் மற்றும் துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு உள்ளது.

இதை கண்காணிக்கும் பொருட்டு ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டு இருபத்தி நான்கு மணிநேரமும் சுழற்சி முறையில் கண்காணிக்கப்பட்டு அவ்வப்போது வாகன சோதனைகள் நடைபெற்று வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் வட்டாட்சியர் ஏகாம்பரம் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் ராஜ மகேந்திரன் என்பவர் எவ்வித ஆவணங்கள் இன்றி எழுபத்தி நான்கு புடவைகள் மற்றும் 32 துண்டுகளை எடுத்து வந்ததை பறிமுதல் செய்து தேர்தல் அலுவலரிடம் உரிய முறையில் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News