அனைத்து சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாட்டையொட்டி சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

Update: 2021-07-21 14:15 GMT

அருள்மிகு ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாள் சமேத ஸ்ரீஇராமலிங்கேஸ்வரர்

பிரதோஷ காலத்தில் சிவபெருமானை மாலை சூரிய அஸ்தமத்திற்கு முன் வழிபடுதல் சால சிறந்தது என்பர். வளர்பிறை,தேய்பிறை என மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு அனைத்து சிவாலயங்களில் நடைபெறும். இந்நாளில் சிவபெருமான் மற்றும் நந்தி பெருமானக்கு பல வகையான அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகமும் அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் நடைபெறும்.

இதனை தொடர்ந்து உற்சவர் நந்தி வாகனத்தில் திருக்கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். அதன்பின் சிவபெருமானுக்கு சிறப்பு தீபாராதனைகள் மற்றும் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்குவர். அவ்வகையில் தமிழகத்தின் வட இராமேஸ்வரம் என்று போற்றி புகழப்படும் திம்மராஜாம்பேட்டை அருள்மிகு ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாள் சமேத ஸ்ரீஇராமலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் இன்று பிரதோஷ சிறப்பு  அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Tags:    

Similar News