600 திருக்கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு : எம்எல்ஏ எழிலரசன் வழங்கல்

காஞ்சிபுரம் தொகுதிக்கு உட்பட்ட கோயில்களில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பினை எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்

Update: 2022-01-13 05:45 GMT

காஞ்சிபுரம் தொகுதியில் உள்ள திருக்கோயில் பணியாளர்களுக்கு எம்எல்ஏ எழிலரசன் பொங்கல் பரிசு வழங்கினார்.

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில்  உள்ள 204 திருக்கோயில்களில் பணிபுரியும், 612 பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பான வேட்டி, சீருடை மற்றும் சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசுகளை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர்  எழிலரசன், இன்று கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலைய த்துறை செயல் அலுவலர்கள்  தியாகராஜன்,   பூவழகி, பரந்தாமன் கண்ணன் ஸ்ரீதரன் மலை வாசன், ஆய்வாளர் பிரித்திகா மற்றும் நகர திமுக செயலாளர் சன் பிராண்ட் ஆறுமுகம் , ஒன்றியக்குழு உறுப்பினர் பிரசாத், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அபுசாலி மற்றும் அறநிலையத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News