காஞ்சிபுரத்தில் ரோட்டரி சங்கங்கள் சார்பாக போலியோ விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம் கிழக்கு ரோட்டரி சங்கம் மற்றும் திருவள்ளூர் ரோட்டரி சங்கம் சார்பில் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

Update: 2021-10-23 11:30 GMT

போலியோ இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய எம்எல்ஏ எழிலரசன்.

காஞ்சிபுரம் கிழக்கு ரோட்டரி சங்கம், திருவள்ளூர் ரோட்டரி சங்கம் இணைந்து உலக போலியோ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாபெரும் இருசக்கர வாகன பேரணி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் துவங்கி ஸ்ரீபெரும்புதூர் ,சுங்குவார்சத்திரம், வாலாஜாபாத் வழியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாக விளையாட்டு திடலில் நிறைவுபெற்றது .

இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் கலந்துகொண்டு போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு பற்றி சிறப்புரையாற்றினார்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மகாராணி , மாவட்ட துணை கண்காணிப்பாளர் பிரவீன், திருவள்ளூர் ஸ்பார்ட்ன்ஸ் ரோட்டரி சங்க தலைவர் கரண்ட் கார்த்திக், ரோட்டரி மாவட்டம் பப்ளிக் இமேஜ் சேர்மன் பரத்குமார், காஞ்சிபுரம் கிழக்கு ரோட்டரி சங்க தலைவர் ரோட்டரியன் முருகேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News