காஞ்சிபுரத்தில் கருணாநிதி நினைவு நாளையொட்டி இன்று அமைதி பேரணி

காஞ்சிபுரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி இன்று அமைதி பேரணி நடைபெற்றது.

Update: 2022-08-07 03:15 GMT

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி  இன்று காஞ்சிபுரத்தில் அமைதி பேரணி நடைபெற்றது. காஞ்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், உத்திரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த  அமைதி பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் காந்திசாலை பெரியார் தூண் பகுதியில் துவங்கிய அமைதி பேரணி, தேரடி, ரங்கசாமிகுளம், வழியாக கலைஞர் பவள விழா மாளிகையில் நிறைவுபெற்றது இப்பேரணியில்  பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் வேடம் அணிந்து  கலந்து கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக அண்ணா மற்றும் கருணாநிதியின் உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .இந்த பேரணியில் 500-க்கும் மேற்பட்ட தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News