காஞ்சிபுரம் அருகே ஊராட்சி மன்ற செயலர் மாரடைப்பால் மரணம்

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துவேடு கிராம ஊராட்சி மன்ற செயலர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

Update: 2022-05-22 04:30 GMT

 முத்துவேடு கிராம ஊராட்சி மன்ற செயலாளர் மோகனராம்.

காஞ்சிபுரம் அடுத்த முத்து வேடு கிராம ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருபவர் மோகன்ராம். இவர் இன்று அதிகாலை தீடிர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஊராட்சி மன்ற செயலாளர் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாகவே ஊராட்சி மன்ற செயலர்களுக்கு அதிக பணிச் சுமை உள்ளதாகவும், இரவு வரை ஆய்வு கூட்டம் நடைபெறுவதாகவும், இதனைக் கைவிடுமாறு சங்கம் சார்பில் பல்வேறு காலகட்டங்களில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News