காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றப்பட்டது

ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலர்கொடிகுமார் பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று சுதந்திர தின விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

Update: 2022-08-13 15:00 GMT

: கீழ்கதிர்பூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலர்கொடிகுமார், 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்றப்பட்ட போது 

வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வீடுகளிலும் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி தேசிய பற்றை வெளிப்படுத்த வேண்டும் என மத்திய ,  மாநில அரசு தெரிவித்தது. ஆகஸ்ட் 13முதல் 15ஆம் தேதி வரை மூன்று நாட்கள் தேசிய கொடி ஒவ்வொரு வீடுகளிலும் பறக்க விட உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடும் செய்யப்பட்டது. 

இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட கீழ்கதிர்பூர், திருப்பருத்திக்குன்றம், கீழம்பி, திம்மசமுத்திரம், முசரவாக்கம் உள்ளிட்ட 40 ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும், கடைகள்,வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் தேசப் பக்தியை வெளிபடுத்தும் வகையில் மூவர்ணக் கொடி பறக்க விடப்பட்டது.ஒவ்வொரு கிராமங்களில் உள்ள வீடுகளில் பறக்க விடப்பட்ட கொடிகளை காஞ்சிபுரம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் மலர்கொடி குமார் பார்வையிட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட 40 ஊராட்சியில் 32,802கொடிகள் வழங்கப்பட்டு அதனை அனைத்து ஊராட்சிகளிலும் ஏற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags:    

Similar News