காஞ்சியில் ரோட்டரி கிளப் சார்பில் நடைபெற்ற மாபெரும் ரத்த முகாம்

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் 4 ரோட்டரி சங்கங்கள் இணைந்து நடத்திய ரத்ததான முகாமில் ஏராளமானோர் ரத்ததானம் செய்தனர்.

Update: 2022-07-01 09:00 GMT

காஞ்சிபுரம் ரோட்டரி கிளப் சங்கங்கள் சார்பில் நடைபெற்ற ரத்த தான முகாமில் ரத்த தானம் வழங்கிய உறுப்பினர்கள்.

ரோட்டரி கிளப் காஞ்சிபுரம், ரோட்டரி கிளப் ஆப் டெம்பிள் சிட்டி, ரோட்டரி கிளப் ஆப் காஞ்சிபுரம்‌ காஸ்மிக் கிளப்,  ரோட்டரி கிளப் ஆப் இன்பினிட்டி ஆகிய நான்கு சங்கங்கள் மற்றும் காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனை இணைந்து தனியார் திருமண மண்டபத்தில் மாபெரும் ரத்ததான முகாம் நடத்தினர்.

ரோட்டரி சங்க தலைவர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த ரத்ததான முகாமில் ஏராளமான ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் ரத்ததானம் மேற்கொண்டனர். ரத்ததானம் செய்த அனைவருக்கும்  சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கபட்டனர்.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அதிக அளவில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் ரத்தம் அதிக அளவில் நோயாளிகளுக்கு தேவைப்படுவதால் இந்த குருதி நன்கொடை பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் நான்கு ரோட்டரி சங்க உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News