காஞ்சிபுரம் ஓன்றியம்‌: தலைவராக மலர்கொடிகுமாரும் , துணை தலைவராக திவ்யபிரியா தேர்வு

காஞ்சிபுரம் ஒன்றியக்குழு தலைவராக மலர்கொடி குமார் மற்றும் துணைத் தலைவராக திவ்யபிரியாவும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

Update: 2021-10-22 10:45 GMT

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்மலர்கொடி குமார், துணைத் தலைவர் திவ்யபிரியா.

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் ஓன்றியக் குழு உறுப்பினர்களாக 18 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் திமுக 13 பேரும் , அதிமுகவை சேர்ந்த இருவரும் , பாமக, பாஜாக , விசிகவை சேர்ந்த தலா ஓருவர் என தேர்வு செய்யபட்டனர்.


இந்நிலையில் கடந்த 20ம் தேதி தேர்வு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதில் திமுக சார்பாக ஓன்றியத்தலைவர் தேர்வாக அதிக வாய்ப்புள்ள நிலையில் காஞ்சிபுரம் ஒன்றிய திமுக ஒன்றிய செயலாளரும் , முன்னாள் காஞ்சிபுரம் ஒன்றிய தலைவருமான பி.எம்.குமாரின் மனைவியுமான மலர்கொடிகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மதியம் நடைபெற்ற துணை தலைவர் தேர்தலில்  திவ்யபிரியா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News