காஞ்சிபுரத்தில் தம்பதியர் மர்ம மரணம் - காவல்துறை விசாரணை!

காஞ்சிபுரம் மளிகை செட்டி தெருவில் வசித்து வந்த தம்பதியினர் மர்ம முறையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2021-06-14 14:21 GMT

தம்பதியர் இறந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்திய காட்சி.

பெரிய காஞ்சிபுரம் மளிகை செட்டி தெருவில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற அரசு மனநல காப்பக வார்டன்  ஜெ.மொஹமதுஜலில்- மெகருன்னிஷா தம்பதியினர். இவர்களுக்கு பஷீரா என்ற மகளும் மற்றும் ஆஷூஸ்மீரான் என்ற மகன் உள்ளனர். மகள் திருமணமான நிலையில் மகனுடன் வசித்து வருகிறார்.

மகன் காஞ்சிபுரம் தனியார் சூப்பர் மார்கெட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில்  மதியம் மாடியில் தூங்க மகன் சென்ற நிலையில் மாலை பார்க்கும் போது தம்பதியினர் இருவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.இதை கண்ட மகன் ஆஷீஷ்மீரான் சிவ காஞ்சி  காவல்துறையினர் மற்றும் தனது அக்காவிற்கு  தகவல் தெரிவித்துள்ளார்.

 சம்பவ இடத்திற்கு வந்த சிவகாஞ்சி உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மரணம் குறித்து மகனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். சில காஞ்சி காவல்துறையினர் தம்பதியினர் மரணம்  சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News