காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளை 100% திமுக கைப்பற்றியது
காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில்11பதவிகளையும்100% திமுகவினர் வெற்றி பெற்று அதிமுகவினரை ஒயிட் வாஷ் செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்றது. இவைகளில் பதிவான வாக்குகள் நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் காலை 7 மணியளவில் துவங்கியது.
இத்தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு 11 பதவிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர், மக்கள் நீதி மையம் என பல அரசியல் கட்சிகள் போட்டியிட்டன. பதினோரு இடங்களில் திமுக எட்டு இடங்களிலும் , காங்கிரஸ் இரண்டு இடங்களிலும், மதிமுக ஒரு இடங்களிலும் என திமுக கூட்டணி கட்சியினர் அனைத்திலும் 100சதவீத வெற்றி பெற்றனர்.
போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அதிமுக, பாமக, நாம் தமிழர், மக்கள் நீதி மையம் என அனைத்துக் கட்சிகளும் திமுக ஒயிட் வாஷ் செய்தது.