காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக டாக்டர். எம்.ஆர்த்தி நியமனம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக டாக்டர். என்.ஆர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2021-06-13 14:18 GMT

தமிழகத்தில் இன்று 24ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்து தமிழக தலைமை செயலாளர் வி.இறையன்பு  உத்தரவிட்டார்.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த மகேஸ்வரி ரவிக்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு அதற்கு பதிலாக தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனராக இருந்த டாக்டர் மா . ஆர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், காஞ்சிபுரத்தை பூர்வீகமாக கொண்டவர். பல் மருத்துவரான இவர் 2012ம் ஆண்டில் ஐஏஎஸ் பணியில் சேர்ந்து டிக் நிறுவனம் , தமிழக சிமெண்ட் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனராக பணியாற்றினார்.

Tags:    

Similar News