காஞ்சிபுரம் : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-06-11 06:11 GMT

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார், பெட்ரோல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

தமிழகத்தில் நாள்தோறும் பெட்ரோல், டீசல்  விலை ஏறுமுகம் கண்டு வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். 

இதனை மத்திய அரசு சரியாக கையாள வேண்டும் என கோரி பலமுறை ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தியும் விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறியுள்ளது. எனவே மத்திய அரசை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் அளவூர் நாகராஜன் தலைமையில், தாலுகா அலுவலகம் அருகே பெட்ரோல் நிலையம் முன்பு ஆர்ப்பர்ட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் பேiருந்து நிலையம் அருகே பெட்ரோல் டீசல் விலையை குறைக்க கோரி மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பி காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News