காஞ்சிபுரம்: 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில் 65 பேருக்கு பட்டா!

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் 65 நபர்களுக்கு பட்டா , 5 ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

Update: 2021-06-07 08:30 GMT

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் மனுக்களின் மீது நடவடிக்கை எடுத்தபோது.

கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு தொகுதியிலும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று வெற்றி பெற்று முதலமைச்சரானதும் 100 நாட்களில் மக்கள் மனு  மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இத்திட்டத்தில் இன்று காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஏனாத்தூர் , கீழ்கதிர்பூர் , குண்டுகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பெறப்பட்ட மனுக்கள் 65 பேரிடம் ஆய்வு மேற்கொண்டும் மற்றும் 5 ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வட்டாட்சியர் ஒப்புதல் வழங்கினார் .

அதனடிப்படையில் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி தலைமையில் நடைபெற்ற விழாவில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் 60 பேருக்கு பட்டா, 5 முதியவர்களுக்கு ஓய்வூதியங்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ஜெயலட்சுமி, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.   

Tags:    

Similar News