புளிய மரத்தில் மோதிய லாரியில் சிக்கிய ஓட்டுநர்- பத்திரமாக மீட்பு

சென்னைக்கு கிரானைட் கற்கள் ஏற்றி சென்ற போது தூக்க கலக்கத்தில் லாரி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தது புளிய மரத்தில் மோதியது.

Update: 2022-05-09 05:00 GMT

விபத்தில் சிக்கிய ஓட்டுநரை மீட்ட காவல் மற்றும் தீயணைப்பு துறையினர்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து,  மேடவாக்கம் பகுதிக்கு கிரானைட் கல் ஏற்றிக்கொண்டு பாரத் பென்ஸ் டெய்லர் லாரி மணிமங்கலம் அருகே சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனர் வினோத் குமார் தூக்க கலக்கத்தில் இருந்துள்ளார். இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிரைலர் லாரி வேகமாக சாலையோர புளியமரத்தில் மோதியதில் லாரியின் முன் பாகம் முழுவதும் அப்பளம் போல நொறுங்கி பின்புறம் உள்ள கிரானைட் கற்கள் அனைத்தும் சுக்குநூறாக நொறுங்கிப் போயின.

ஓட்டுனர் வினோத் குமார்,  காலிரண்டும் அப்பளம் போல் நொறுங்கிய பகுதிக்குள் மாட்டிக் கொண்டதால் என்ன செய்வதென்று அறியாது துடித்துக் கொண்டிருந்தார். இதனை அறிந்த மணிமங்கலம் காவல்துறையினர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து ஜேசிபி உதவியுடன் வினோத் குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News