லஷ்மி , சரஸ்வதி உடன் அருள்பாலித்த காமாட்சியம்மன்

Update: 2021-03-26 05:30 GMT

பங்குனி உத்திர விழாவினை ஓட்டி காஞ்சி காமாட்சியம்மன் லஷ்மி ,சரஸ்வதியுடன் திருக்குள தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் பங்குனி மாத பிரம்மோற்சவம் அருள்மிகு ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் சக்திபீடமான ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் பங்குனி மாத உற்சவத்தையொட்டி காமாட்சி அம்பாள், லட்சுமி, சரஸ்வதி உடன் திருக்கோயிலில் உள்ள திருக்குளத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம் .

அவ்வகையில் கடந்த 2 நாட்களாக நாள்தோறும் இரவு 7 மணியளவில் சிறப்பு அலங்காரங்களுடன் காமாட்சி அம்மன் லஷ்மி, சரஸ்வதி தேவியுடன் எழுந்தருளி திருக்குளத்தை வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாவிில் சிறப்பு வானவேடிக்கை நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்த பக்தர்களுக்கு குங்குமம் மற்றும் பிரசாதங்கள் வழங்கபட்டன.

Tags:    

Similar News