மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு

மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2021-03-20 10:45 GMT

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பொதுமக்கள் 100 சதவீதம் வக்களிப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  பொதுமக்கள் அதிகளவில்  கூடும் பல்வேறு இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம், ஏனாத்தூர் , மீனாட்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் நர்சிங் பயிலும் மாணவ, மாணவியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடந்தது. 

இந்நிகழ்ச்சியில் வாக்களிப்பது எவ்வாறு என அறிந்து கொள்ள மாதிரி வாக்கு பதிவு மையம் , வாக்கு அளிக்க பணம் பெறமாட்டோம் என குறுநாடகம், விழிப்புணர்வு இமேஜ் வடிவில் நூறு சதவீத வாக்குபதிவு என பல வகைகளில் விழிப்புணர்வு செய்தனர். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் ஜீவா, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர்டாக்டர் அனுராதா உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News