வெகுமதியை தவிர்க்க காஞ்சிபுரம் ஆணையர் வேண்டுகோள்

தன்னை சந்திக்கும் போது வெகுமதி, சால்வைகளை தவிர்க்கவும் என காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் அலுவலக அறை முன் ஒட்டப்பட்டுள்ளது.

Update: 2022-02-24 09:00 GMT

இணை இயக்குனர் மற்றும் ஆணையர் நாராயணன் ( உள் படம்:அலுவலக அறை முன்பு ஓட்டப்பட்ட நோட்டீஸ் )

காஞ்சிபுரம் பெருநகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் மாநகராட்சியின் உதவி இயக்குநர் மற்றும் ஆணையராக பா.நாரயணன் பொறுப்பேற்றார்.

தற்போது நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வரும் 4ம் தேதி மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர். 

ஆணையர் நாராயணன் கடந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்த சொல்ல வரும் நபர்கள் இனிப்பு, பரிசு பொருட்கள்‌, சால்வைகளை தவிர்க்கமாறு  தனது அலுவலக அறை முன்பு நோட்டீஸ் ஓட்டியிருந்தார்

தற்போது தன்னை சந்திக்க வரும் நபர்கள் வெகுமதியை  தவிர்க மற்றொரு  நோட்டீஸை  ஓட்டியுள்ளார்.

மாநகராட்சியில் அதிகளவில் வருவாய்  ஈட்ட வாய்ப்புள்ள நிலையில்  இச்செயல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

Tags:    

Similar News