காஞ்சிபுரம் அருகே சுவர் இடிந்து கல்லூரி மாணவன் உயிரிழப்பு

தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த காஞ்சிபுரம் அடுத்த சிறு காவேரிபாக்கத்தை சேர்ந்த மாணவர் சுதர்சன் உயிரிழந்தார்

Update: 2022-08-06 13:15 GMT

காஞ்சிபுரம் அடுத்த சிறு காவேரிப்பாக்கம் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பலியான கல்லூரி மாணவன் சுதர்சன்.

காஞ்சிபுரம் அருகே உள்ள சிறு காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர்  டிரைவராக பணியாற்றி வருகின்றார். இவரது மூத்த மகன் சுதர்சன் அங்குள்ள தனியார் கல்லூரியில் பாலிடெக்னிக்கில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இந்நிலையில் அவர்களது பழைய ஓட்டு வீட்டை இடித்து புதுப்பிப்பதற்காக ஓட்டு வீட்டின் சுவரின் அடிப்பக்கத்தில் சுதர்சன் இடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சுவர் அவர் மீது இடிந்து விழுந்தது.  இதில் சுதர்சன் சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலுசெட்டி காவல்துறையினர் உயிரிழந்த கல்லூரி மாணவன் சுதர்சனின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த கல்லூரி மாணவன் தாய் சரஸ்வதி விவசாயம் செய்து வருகின்றார். சுதர்சனுக்கு சூர்யா மற்றும் சுதாகர் என இரண்டு தம்பிகள் உள்ளனர்.

வீட்டின் சுவர் இடிந்து கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சிறுகாவேரிபாக்கம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது.

Tags:    

Similar News