திருவிழாவில் நடனமாடுவதில் ஏற்பட்ட மோதல்: இருவருக்கு கத்திக்குத்து

Today Crime News In Tamil - ஏரிக்கரை அம்மன் திருவிழா ஊர்வலத்தில் நடனம் ஆடுதல் குறித்து இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கிருஷ்ணகுமார் , மணிகண்டன் ஆகியோர் மாறி மாறி கத்தியால் குத்திக் கொண்டனர்.

Update: 2022-08-08 04:45 GMT

பைல் படம்.

Today Crime News In Tamil - காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை, காந்திநகர் பகுதியில் மாரியம்மன் கோயில் திருவிழா நேற்று இரவு நடைபெற்றது.

இரவு 10.00 மணி அளவில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. அப்போது தாரை தப்பட்டையுடன் அம்மன் வீதி உலா சென்ற போது சில இளைஞர்கள் டான்ஸ் ஆடிக்கொண்டு சென்றனர்.

குடிபோதையில் டான்ஸ் ஆடிய அவர்களுக்குள் டான்ஸ் ஆடுவது சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவருக்கு வயிற்றில் கத்தியால் கிழித்த காயமும் , சதாவரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு தலையில் கத்தியால் கிழித்த காயமும் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த இருவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கிருஷ்ணகுமார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த மோதல் சம்பவம் தொடர்பாக ஈஸ்வரன் , ராகுல் , ஹரீஷ் , குணா என்ற நான்கு நபர்களை கைது செய்து மோதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News