காஞ்சிபுரம் அருகே திருப்பருத்திகுன்றம் ஊராட்சியில் சி.சி.டி.வி. கேமரா

காஞ்சிபுரம் அடுத்த திருப்பருத்திக்குன்றம் ஊராட்சியில் பாதுகாப்பு கருதி சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.

Update: 2022-01-20 04:35 GMT
காஞ்சிபுரம் அருகே திருப்பருத்தி குன்றம் ஊராட்சியில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது திருப்பருத்திகுன்றம் கிராம ஊராட்சி. இங்கு சுமார் 3 ஆயிரம் பேர் வசித்து வரும் நிலையில் காஞ்சிபுரம் நகர வளர்ச்சியின்  புதிய வீடுகள் அமைக்க பொது மக்களின்  முக்கிய தேர்வாக இப்பகுதி உள்ளது.

புதிய குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதாலும், காஞ்சிபுரம் நகரில் இருந்து புறவழி சாலை செல்ல நெரிசல் இல்லாத சாலையாக இப்பகுதி விளங்குகிறது.

இதனால் இப்பகுதி வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி கிராம ஊராட்சி மன்ற தலைவர் மலர் ராமச்சந்திரன் கிராம பகுதியின் முக்கிய சந்திப்புகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகள் என தேர்வு செய்து 12 உயர்தர கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணி தீவிரமாக நடந்து நிறைவு பெற்றுள்ளது .

இதன்மூலம் குற்ற சம்பவங்களை தடுக்கவும் , பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அந்தந்த பகுதிகளில் இளைஞர்களின் உதவியுடன் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பொதுமக்களின் பாதுகாப்பான வசிப்பிட  பகுதியாக திருப்பருத்திகுன்றம் ஊராட்சி விளங்கும் எனவும் ஊராட்சி தலைவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News