ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு புதுமணப்பெண் மனு தாக்கல்

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு, 15வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, பட்டதாரி புதுமணப்பெண் மனு தாக்கல் செய்தார்.

Update: 2021-09-22 06:30 GMT

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு, 15வது வார்டு உறுப்பினர் பதவிக்காக, வேட்புமனு தாக்கல் செய்த புது மணப்பெண் ஜெயப்பிரியா.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், கடந்த 15ஆம் தேதி துவங்கி இன்று நிறைவு பெறுகிறது. இறுதி நாளான இன்று,  வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் அதிக அளவில் குவிந்தனர். காலை முதலே அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள், தங்கள் ஆதரவு பொதுமக்களுடன் ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

அவ்வகையில், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், 15வது வார்டுக்கான வேட்புமனுவை, புது மணப்பெண்ணான, பட்டதாரி அ. ஜெயப்பிரியா தாக்கல் செய்தார். திருமணமாகி சில நாட்களேயான நிலையில், தனியாக வந்து அவர் வேட்புமனு தாக்கல் செய்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

கடந்த காலங்களில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளம் பெண்கள் பாசறை  துணைச் செயலாளராக, தாம் பணிபுரிந்த வந்ததாகவும், தனது தகப்பானரும் அதிமுக நிர்வாகி என்று கூறினார். இருவருக்கும் இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் சுயேச்சையாக போட்டியிடுவதாக, அவர் தெரிவித்தார் 

Tags:    

Similar News