அவதூறாக பேசினால் அமைச்சர் நாக்கு துண்டிக்கப்படும் - பாஜக பேச்சாளர் எச்சரிக்கை

BJP News Today Live - காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட பிரச்சார பிரிவு தலைவர் குமாரசாமிநாதன் கலந்துகொண்டு பேசினார்.

Update: 2022-06-16 05:00 GMT

பிள்ளையார் பாளையம் பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுகூட்டம்.

BJP News Today Live - காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் பகுதியிலுள்ள புதுப்பாளையம் தெருவில் மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்க தெருமுனை கூட்டம் காஞ்சி மேற்கு நகர பா.ஜ.க தலைவர் அதிசயம் குமார் தலைமையில் நடைபெற்றது. இத்தெருமுனை பிரச்சார கூட்டத்தில் மத்திய அரசின் எட்டு ஆண்டுகால ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட காஞ்சிபுரம் மாவட்ட பிரச்சார பிரிவு தலைவர் குமாரசாமிநாதன் பேசுகையில், இம் மாவட்டத்தை சார்ந்த தமிழக குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழக பா.ஜ.க மாநில அண்ணாமலையை வாலை ஒட்ட நெறுக்கி சுண்ணாம்பு வைத்திடுவோம் என அவதூறாக பேசி வருகிறார் என்றும், எங்களுக்கு வால் இருந்தால் தானே நாங்கள் கோவப்பட வேண்டும் அண்ணாமலைக்கும் வால் கிடையாது, ஆனால் உங்களுக்கு நாக்கு உள்ளது அதை வைத்துக்கொண்டு சும்மா இருங்கள், இல்லாத வாலை நறுக்க முடியாது ஆனால் இருக்கின்ற நாக்கை நாங்கள் அறுக்க முடியும்,நாக்கு அறுக்கப்படும் என்றும், அமைச்சர் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா என ஆவேசப்பட்ட அவர் மேலும் தான் பேசுவதை குறிப்பேடுக்கும் காவல்துறையினரை பார்த்து நான் பேசுதை நன்றாக குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள், மறைந்திருந்து கேட்டுக்கொண்டிருக்கும் மாற்றுக்கட்சி நண்பர்களும் இதனை நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள் என கூறி பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் வாசன், மாவட்ட பொதுச்செயலாளர் கூரம் விஷ்வநாதன், காஞ்சி நகர பொதுச் செயலாளர் ஜீவானந்தம், மாநில செயற்குழு உறுப்பினர் ஜானகிராமன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் பாஜக தொண்டர்கள் என திரளானோர் கலந்துக்கொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News