தமிழகத்தில்தான் அம்பேத்கர் சிலை அவமதிக்கப்படுகிறது: தொல்.திருமாவளவன்

காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நிறுவப்பட்ட சிலையை திறந்து வைத்தார்

Update: 2022-10-29 15:00 GMT

காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் பகுதியில் அம்பேத்கர் சிலையினை திறந்து வைத்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய விசிக தலைவர் தொல். திருமாவளவன்

காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் கிராம கூட்டு சாலையில் காஞ்சிபுரம் வடக்கு ஓன்றிய விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக ஆளுயர அம்பேத்கர் சிலை திறப்பு விழா ஒன்றிய செயலாளர் தி.இளமாறன் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் , விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வருகை புரிந்த போது அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு ஒன்றியம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து விசிக தலைவர் தொல் திருமாவளவன் , அம்பேத்கர் சிலையினை திறந்து வைத்து மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இச்சிலை நிறுவ பாடுபட்ட 22 நபர்களுக்கு அம்பேத்கர் சிலை வழங்கி வாழ்த்தினார். இதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய தொல்.திருமாவளவன் , கடந்த 15 ஆண்டுகளாக இச்சிலை அமைக்க பாடுபட்ட நிலையில் இன்று இதனை திறப்பதில் மகிழ்ச்சி. இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே அம்பேத்கர் சிலை அமைப்பது‌பெரூம் சவாலாக உள்ளது.

மேலும் தமிழகத்தில் மட்டுமே அம்பேத்கர் சிலையினை அவமரியாதை செய்கின்றனர். இது பெரும் வருத்தத்தை அளிக்கிறது. தமிழகத்தில் புதிய சிலை அமைக்க இன்று வரை பெரும் சிரமத்தை காணும் நிலை உள்ளது .பிற மாநிலங்களில் அம்பேத்கர் சிலை வைப்பதிலும் , சட்டமன்ற , நாடாளுமன்ற வளாகத்தில் என பிரமிக்கும் வகையில் சிலை அமைக்கப்பட்டு சிறப்பு பெற்றுள்ளது.

அம்பேத்கர் என்பவர் மடத்தின் மடாதிபதி அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பாடுபட்டவர் என்பது மட்டுமே. அம்பேத்கர், பெரியாரை ஏற்றுக்கொண்டவர்கள் பாஜகவை ஆதரிக்க மாட்டார்கள். தற்போது தமிழகத்தில் உள்ள பட்டியல் இன மக்கள் மற்றும் பழங்குடி மக்களை குறிவைத்து செயல்படும் நிலை கண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நவம்பர் 1ஆம் தேதி  சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.  இதே போல் நவம்பர் 6ம்தேதி அமைதி அறப்போர் என்கிற வகையில் மனு ஸ்ருதி குறித்து பொதுமக்ள்‌ அறிந்து கொள்ளும் வகையில் குறிப்பேடு வழங்கப்படவுள்ளது என்றார் திருமாவளவன்.

இந்நிகழ்ச்சியில் விசிக மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் பார்வேந்தன், காஞ்சி மண்டல செயலாளர் விடுதலை செழியன், மாவட்ட ஓருங்கிணைப்பாளர் பாசறை செல்வராஜ் , மக்கள் மன்றம் நிர்வாகிகள் மகேஷ், ஜெர்சி , விசிகவை சேர்ந்த இந்திரா அம்பேத்கர்வளவன்‌, ஒன்றிய குழு உறுப்பினர் ரேகா ஸ்டாலின் , மாவட்ட தொண்டரணி துணை செயலாளர் விநாயகம் , ஏவினார்,   பருத்தி குளம் சேகர் , ஓரிக்கை டேவிட் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் கீழ்கதிர்பூர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News