காஞ்சிபுரம் மாவட்டத்தில் 500 மையங்களில் 8வது மெகா தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8வது தடுப்பூசி முகாம் துவங்கியது. மாவட்டம் முழுவதும் 500 முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

Update: 2021-11-14 02:00 GMT

தடுப்பூசி முகாம் (கோப்பு படம் )

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் இருவகையான தடுப்பூசிகளை சிறப்பு தடுப்பூசி முகாமில்  பொதுமக்களுக்கு செலுத்தி வருகின்றனர். வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமை தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

இன்று 8வது தடுப்பூசி முகாம் தமிழகத்தில் நடைபெறுகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 500 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு காலை 7 மணிக்கு துவங்கியது.

இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியினை7,02,310 நபர்களும், இரண்டாவது தவணையை 2 லட்சத்து 70 ஆயிரத்து 156 நபர்களும் செலுத்தி கொண்டுள்ளனர்.

இதுவரை தடுப்பூசியை சேர்த்துக் கொள்ளாத ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 503 நபர்களை கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிறப்பு முகாம் மற்றும் வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்ள உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனாவை  விரட்ட தடுப்பூசி மிகப்பெரிய ஆயுதம் எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News