கோபிசெட்டிபாளையத்தில் டூவீலர் திருடன் கைது

The Bike Thief- கோபிசெட்டிபாளையத்தில் வெவ்வேறு பகுதிகளில் இரண்டு வாகனங்களை திருடிய நபரை, போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-09 04:15 GMT
கைது செய்யப்பட்ட சரவணன்.

The Bike Thief-  ஈரோடு மாவட்டம், கோபி தினசரி மார்க்கெட் யாகூப் வீதியைச் சேர்ந்தவர் ஜாவித் (வயது 32). இவர் தனது வீட்டின் முன்பு டூவீலரை நிறுத்திவிட்டு, சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தார். அப்போது மர்மநபர் ஒருவர், அவருடைய வாகனத்தை தள்ளிக்கொண்டு சென்றதை பார்த்துள்ளார்.

இதனையடுத்து, ஜாவித் பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து, கோபி போலீசில் ஒப்படைத்தனர். பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில் அவர் நம்பியூர் வடக்குதோட்டத்தைச் சேர்ந்த தங்கவேலு என்பவரின் மகன் சரவணன் (40) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், கோபி அருகே உள்ள நாகர்பாளையத்தைச் சேர்ந்த வினித் என்பவரின் வாகனத்தையும் திருடியதும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் சரவணனிடம் விசாரிக்கின்றனர்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News